ஜைன திருத்தலங்கள் ஒரு பார்வை
நாம் இந்த தொகுப்பில் இரு ஜைன ஆலயங்களின் வரலாற்றையும்,பெருமைகளையும் தெரிந்துகொள்வோம்.(1)
தீபங்குடி திருத்தலம்:(திருவாரூர் மாவட்டம்)
சிறப்பு மிக்க பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஜைன திருத்தலமாகும்.இந்த கோவிலின் கட்டடவேலைப்பாடு அதிநுட்பம் வாய்ந்த சுண்ணாம்புகலவையினால்
செய்யப்பட்ட கலைநுட்ப வேலைப்பாடுகள் காண்போரை
வியப்பில்
ஆழ்த்துகிறது!சுற்றி மதிற்சுவர்கள் கொண்ட பிரமாண்டமான தோப்புகளுக்கு நடுவில்இயற்கை
எழில் கொஞ்சும் சூழ்நிலையில்,கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
மூலவராகிய ஆதிநாதருக்கு, தீபநாயகர் என்ற சிறப்பு பெயருடன் அழைப்பதால்இந்த
ஊருக்கு தீபங்குடி என்ற பெயர் வரப்பெற்றதாக கூறப்படுகிறது.
வரலாறாகும்!போரின் கொடுமைகளையும்,
பெருமைகளையும் உலகுக்கு தமிழின் மூலம்"கலிங்கத்து பரணி" பாடி உணர்த்திய "ஜெயங்கொண்டார்" என்னும் சமண தமிழ் புலவர் வாழ்ந்து தமிழுக்கு பெருமைதேடி தந்த ஊர் தீபங்குடியாகும்!
மேலும் ராஜராஜ சோழனின் தங்கை குந்தவை ஜைனத்தின் மீதுள்ளபக்தியினால்
இக்கோவிலுக்கு ஏராளமான நிதியுதவி செய்து ஆதரித்துள்ளார்.பிரமாண்டமான கோட்டை மதில்களுடன் கூடிய சுற்று பிரகாரத்தை கொண்டஇந்ந
திருத்தலத்தில் தெற்கு பிரகாரத்தில் பிரம்ம தேவருக்கு என்று தனி ஆலயமும், தர்மதேவி,சுருதகந்தம்,ஜ்வாலாமாலினி,பைரவர் என்றுசுற்று
பிரகார கோவில்கள் மேலும் அழகுசேர்க்கிறது!மூன்று கால பூஜை நடக்கும் இந்த பழமையான ஜைன ஆலயம் தற்பொழுதுதமிழக
இந்து சமய அறநிலைய துறையின் கட்டுபாட்டில் உள்ளது.தற்பொழுது
மிகவும் சிதலம் அடைந்துள்ள இந்த திருத்தலம் தீபங்குடி
ஜைனர்களின்
முயற்ச்சியாலும்,பிற பக்தர்களாலும் புணரமைப்புவேலை
நடந்து வருகிறது!
ஆன்மீகத்தில் பற்று கொண்ட அன்பர்கள்,தங்களால் இயன்ற பொருள் உதவியோ,பண உதவியோ செய்யுமாறு வேண்டுகிறேன்!பொருள் உதவி செய்பவர்கள் சிமெண்ட் மூட்டை,மற்றும் பெய்ண்டிங்,சுண்ணாம்பு பூச்சாகவோ வழங்கலாம்.பண உதவி செய்ய விரும்புபவர்கள் வரைவு வோலையாகவும்,டி.டி யாகவும்,மணியாடர் மூலமாகவும் ," ஸ்ரீ தீபநாயக சுவாமி ஷேத்திர சேவா சங்கம் " பெயரில் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி புண்ணியம் பெறலாம்.முகவரி:தீபங்குடி கிராமம்,செம்மங்குடி போஸ்ட்,குடவாசல் தாலுக்கா,திருவாரூர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா.
பஸ்ரூட்:கும்பகோணம்-திருவாரூர் பஸ் மார்க்கத்தில்,அரசவனங்காடு என்கின்ற பஸ்டாப்பில்
இறங்கி,அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தீபங்குடி.
தீபங்குடி கோவிலின் புகைபடத்தை அளித்து எங்களை ஊக்கப்படுத்திய தீபங்குடி
சீதளப்பிரசாத் (RETD VAO) மற்றும் பூபாலன்,மன்னார்குடி(RETDபொறியாளர்),வளத்தி அஜித்பிரசாத்(மஹாவீர் ஸ்டோர்ஸ்,ஆவடி)மற்றும் தீபங்குடி ஜைன இளைஞர்கள் ஆகியோர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
ஆதிநாதரை மூலவராக கொண்ட இக்கோவில் காலத்தால் மிகவும்பழமை
வாய்ந்ததாகும்
அழித்துவிடும் என்று 22வது தீர்தங்கரரான நேமிநாதரின் பரிவார தேவதையான தர்ம தேவி அம்மன் மக்களை எச்சரித்ததால்,சமணர்கள்,தர்மதேவியின் சிலையையும்,நேமிநாதர் சிலையையும் இளங்காட்டில் உள்ள ஜைன ஆலயத்தில் ப்ரதிஷ்டை செய்தனர்என்பார்கள்
.இந்த சிலையை உருவாக்கிய காலம்(விக்ரம ஷம்வத் 720இல் ஆகும்).இந்த காலத்தில் ஜினசேனாச்சார்யர் என்கின்ற மிகப்பெரிய ஜைன முனிவரின்சிஷ்யர்
என்று கூறப்படும் டெல்லியின் மன்னராக ஆட்சி செய்த அமோகவர்ஷன்என்பவரால்
உருவாக்கப்பட்டதாகும்.இந்த இருசிலைகளும் மிகவும் மூர்த்திகரமாக இன்றளவும் உள்ளது உண்மை!
ஒவ்வொரு வெள்ளி கிழமையும் தர்மதேவிக்கும் ,நேமிநாதருக்கும் சிறப்பானபூஜைகள்
இங்கு நடத்தப்படுகிறது.தமிழக ஜைனர்கள் மற்றும் சுற்று வட்டாரமக்கள்
தங்கள் நேர்த்திகடனை செலுத்த வருவது இந்த திருத்தலத்தின் மகிமையை உணர்த்தும் நேரடி சாட்சியாகும்!பழங்காலம் தொட்டே இக்கோவிலில் அருள் கொண்ட அம்மன் தருமதேவிஆலய
அர்ச்சகரின் மீது இறங்கி சாமியாடி மக்களின் குறைகளை தீர்க்கஅருள்வாக்கு
கூறிவருகிறாள்.இந்த நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது!இதற்காக கோவில் நிர்வாகம் மற்றும்அர்ச்சகரோ
எந்த கட்டணமும் வசூலிப்பது கிடையாது.தற்பொழுது இந்த ஆலயத்தில் ப்ரதிஷ்டை பணிகள் நடந்துவருகிறது.ஆன்மீகத்தில் பற்று கொண்ட அன்பர்கள்,தங்களால் இயன்ற பொருள் உதவியோ,பண உதவியோ செய்யுமாறு வேண்டுகிறேன்!பொருள் உதவி செய்பவர்கள் சிமெண்ட் மூட்டை,மற்றும் பெய்ண்டிங்,சுண்ணாம்பு பூச்சாகவோ வழங்கலாம்.பண உதவி செய்ய விரும்புபவர்கள் வரைவு வோலையாகவும்,டி.டி யாகவும்,மணியாடர் மூலமாகவும் ,"ஸ்ரீ நேமிநாதர் பகவான் டெம்பிள் டிரஸ்ட்" பெயரில் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி புண்ணியம் பெறலாம்.விலாசம்:ஜைன் கோவில்,இளங்காடு கிராமம்(&அஞ்சல்) ,வந்தவாசிதாலுக்கா
,திருவண்ணாமலை மாவட்டம் ,தமிழ்நாடு,இந்தியா.
ரூட் விபரம்:வந்தவாசியில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில்ஐந்தாவது
கிலோமீட்டரில் உள்ளது.முக்கிய குறிப்பு:மயிலாப்பூரில் சமணர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக இன்றும் சென்னை கடற்கரையை ஒட்டிய மயிலாப்பூரில் நயினார்தெரு ("நயினார்" என்பதுசமணர்களை
குறிக்கும்)என்று ஒரு தெரு இன்றும் உள்ளது.இளங்காடு ஜைன ஆலயத்தின் புகைப்படங்களை அளித்து எங்களை ஊக்கப்படுத்திய இளங்காடு தேவகுமார்(கோவில்நிர்வாகி),இளங்காடு கிருஷ்ணராஜ்(தமிழ்நாடு
அரசு
அரசு
போக்குவரத்து கழகம்) ஆகியோருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். நன்கொடை அளித்த பக்தர்கள் தங்களின் விவரத்தை இந்த வலைபூவிலோஅல்லது
எங்கள் மின்னஞ்சல் முகவரி, அலைபேசியில் பகிருமாறுஅன்புடன்
கேட்டுகொள்கிறேன்.அதை நாங்கள் தொகுத்து பின்னர்வெளியிடுவோம்
-இந்த
கட்டுரையை எழுதியவர்
வி
.ஜீவகன் வளத்தி.
வெளியிட்டவர்
-
ஜீ.ஹரிஹரசுதன்,
B.E third year,
வளத்தி
No comments:
Post a Comment