Sunday 17 February 2013

பூமியின் வயது" இந்திய புராணமும்,உலக விஞ்ஞானமும்:

ஆதிநாதரை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்குமுன் புராணங்களில் காணப்படும் மெய்ஞான உண்மைகளைதெரிந்து
கொள்வோம்!நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பதை பின்வரும் குறிப்புகளால்தெரிந்துகொண்டு
பெருமை அடைவோம்!யுகங்களின் கணக்கு:1.
குருத்தா யுகம்=17,28,000 ஆண்டுகள்2. திரேதா யுகம்=12,96,000 ஆண்டுகள்3. துவாபரதா யுகம்=08,64,000 ஆண்டுகள்4. கலியுகம்=04,32,000 ஆண்டுகள்
ஆகமொத்தம்
43,20,000 ஆண்டுகளைகொண்டது
.
இந்த
நான்கு யுகங்களை கொண்டது 1 மகாயுகம் என்பதுஆகும்
.
71
மகாயுகங்களை கொண்டது 1 மன்வன்தரம் என்பதுஆகும்
.
தற்பொழுது
27 மகாயுகம் முடிந்து 28 வது மகாயுகம் நடக்கிறது.
மன்வந்தரம்
7 வது முறை நடக்கிறது.

71
மகாயுகம்* 43,20,000(1 யுகம்) பெருக்கினால் (71*43,20,000)=30,67,20,000 (
முப்பது கோடியே அறுபத்து ஏழு லட்சத்து இருபது ஆயிரம் வருடங்கள் ஆகுகிறது)
6
மன்வன்தரம் முடிந்துள்ளதால்,(6*30,67,20,000(1
மன்வன்தரம்)) பெருக்கினால்= 184,03,20,000 வருடங்கள் ஆகும்.
ஆக மொத்தம் 6 மன்வன்தரம் முடிந்தபோது பூமியின் வயது நூற்று எண்பத்து நான்கு கோடியே மூன்று லட்சத்து இருபதாயிரம் ஆண்டுகள் ஆனது.
ஒரு
மன்வன்தரம் முடிந்தவுடன் ஒரு சந்திகாலம் என்பதுஆரம்பிக்கும்
.
அது
நடந்து முடிக்க 17,28,000 ஆண்டுகள்(பதினேழு லட்சத்துஇருபத்து
எட்டாயிரம் ஆண்டுகள் ஆகும்)
தற்பொழுது
6 சந்திகாலம் முடிந்துள்ளதால் 6* 17,28,000=1,03,68,000
வருடம்(ஒரு கோடியே மூன்று லட்சத்து அறுபத்து எட்டாயிரம்வருடம்
ஆகிறது.)மேலும் தற்பொழு 28வது மகாயுகத்தை பூமி தாண்டிய
வருடம்
38,93,105 (முப்பத்து எட்டு லட்சத்து தொண்ணூற்றுமூவாயிரத்து
நூற்று ஐந்து வருடம்) ஆகுகிறது.
மேற்கூறிய
அனைத்து வருடங்களையும் கூட்டினால்,6
மன்வன்தரம் =184,03,20,0006
சந்திகாலம் =001,03,68,00028
மகாயுகத்தில் பூமி தாண்டிய வயது =000,38,93,105
ஆகமொத்தம் 185,45,81,105
நூற்று என்பத்து ஐந்து கோடியே நாற்பத்து ஐந்து லட்சத்துஎண்பத்து
ஓராயிரத்து நூற்று ஐந்து வருடங்கள் ஆகிறது.இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே கணக்கிட்டு இந்தியாவில் ஆன்மீகத்தின் வாயிலாககூறப்பட்டது
!

Saturday 9 February 2013

ஜைன திருத்தலங்கள் ஒரு பார்வை
 நாம் இந்த தொகுப்பில் இரு ஜைன ஆலயங்களின் வரலாற்றையும்,பெருமைகளையும் தெரிந்துகொள்வோம்.
 
 
(1)
தீபங்குடி திருத்தலம்:(திருவாரூர் மாவட்டம்)





இந்த திருத்தலம் ஆதிபகவானை மூலவராக கொண்டு தொண்மை வாய்ந்தவரலாற்று

சிறப்பு மிக்க பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஜைன திருத்தலமாகும்.இந்த கோவிலின் கட்டடவேலைப்பாடு அதிநுட்பம் வாய்ந்த சுண்ணாம்புகலவையினால்
செய்யப்பட்ட கலைநுட்ப வேலைப்பாடுகள் காண்போரை

வியப்பில்
ஆழ்த்துகிறது!சுற்றி மதிற்சுவர்கள் கொண்ட பிரமாண்டமான தோப்புகளுக்கு நடுவில்இயற்கை
எழில் கொஞ்சும் சூழ்நிலையில்,கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
மூலவராகிய ஆதிநாதருக்கு, தீபநாயகர் என்ற சிறப்பு பெயருடன் அழைப்பதால்இந்த
ஊருக்கு தீபங்குடி என்ற பெயர் வரப்பெற்றதாக கூறப்படுகிறது.




ஸ்ரீ
ராமருடைய மகன்களான லவன்,குசன் இருவரும் வழிப்பட்டதாககர்ணபரம்பரை
வரலாறாகும்!போரின் கொடுமைகளையும்,

பெருமைகளையும் உலகுக்கு தமிழின் மூலம்"கலிங்கத்து பரணி" பாடி உணர்த்திய "ஜெயங்கொண்டார்" என்னும் சமண தமிழ் புலவர் வாழ்ந்து தமிழுக்கு பெருமைதேடி தந்த ஊர் தீபங்குடியாகும்!
மேலும் ராஜராஜ சோழனின் தங்கை குந்தவை ஜைனத்தின் மீதுள்ளபக்தியினால்
இக்கோவிலுக்கு ஏராளமான நிதியுதவி செய்து ஆதரித்துள்ளார்.பிரமாண்டமான கோட்டை மதில்களுடன் கூடிய சுற்று பிரகாரத்தை கொண்டஇந்ந
திருத்தலத்தில் தெற்கு பிரகாரத்தில் பிரம்ம தேவருக்கு என்று தனி ஆலயமும், தர்மதேவி,சுருதகந்தம்,ஜ்வாலாமாலினி,பைரவர் என்றுசுற்று
பிரகார கோவில்கள் மேலும் அழகுசேர்க்கிறது!மூன்று கால பூஜை நடக்கும் இந்த பழமையான ஜைன ஆலயம் தற்பொழுதுதமிழக
இந்து சமய அறநிலைய துறையின் கட்டுபாட்டில் உள்ளது.தற்பொழுது

மிகவும் சிதலம் அடைந்துள்ள இந்த திருத்தலம் தீபங்குடி
ஜைனர்களின்
முயற்ச்சியாலும்,பிற பக்தர்களாலும் புணரமைப்புவேலை
நடந்து வருகிறது! 
ஆன்மீகத்தில் பற்று கொண்ட அன்பர்கள்,தங்களால் இயன்ற பொருள் உதவியோ,பண உதவியோ செய்யுமாறு வேண்டுகிறேன்!பொருள் உதவி செய்பவர்கள் சிமெண்ட் மூட்டை,மற்றும் பெய்ண்டிங்,சுண்ணாம்பு பூச்சாகவோ வழங்கலாம்.பண உதவி செய்ய விரும்புபவர்கள் வரைவு வோலையாகவும்,டி.டி யாகவும்,மணியாடர் மூலமாகவும் ," ஸ்ரீ தீபநாயக சுவாமி ஷேத்திர சேவா சங்கம் " பெயரில் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி புண்ணியம் பெறலாம்.முகவரி:தீபங்குடி கிராமம்,செம்மங்குடி போஸ்ட்,குடவாசல்  தாலுக்கா,திருவாரூர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா.
பஸ்ரூட்:கும்பகோணம்-திருவாரூர் பஸ் மார்க்கத்தில்,அரசவனங்காடு என்கின்ற பஸ்டாப்பில்
இறங்கி,அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தீபங்குடி.

தீபங்குடி கோவிலின் புகைபடத்தை அளித்து எங்களை ஊக்கப்படுத்திய தீபங்குடி
சீதளப்பிரசாத் (RETD VAO) மற்றும் பூபாலன்,மன்னார்குடி(RETDபொறியாளர்),வளத்தி அஜித்பிரசாத்(மஹாவீர் ஸ்டோர்ஸ்,ஆவடி)மற்றும் தீபங்குடி ஜைன இளைஞர்கள் ஆகியோர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.







(2) இளங்காடு ஜைன கோவில்:


ஆதிநாதரை மூலவராக கொண்ட இக்கோவில் காலத்தால் மிகவும்பழமை
வாய்ந்ததாகும்




கடைச்சங்க
காலத்தில் தமிழகத்தில் ஏற்பட இருக்கும் ஆழிப்பேரலைமயிலாப்பூரை
அழித்துவிடும் என்று 22வது தீர்தங்கரரான நேமிநாதரின் பரிவார தேவதையான தர்ம தேவி அம்மன் மக்களை எச்சரித்ததால்,சமணர்கள்,தர்மதேவியின் சிலையையும்,நேமிநாதர் சிலையையும் இளங்காட்டில் உள்ள ஜைன ஆலயத்தில் ப்ரதிஷ்டை செய்தனர்என்பார்கள்
.இந்த சிலையை உருவாக்கிய காலம்(விக்ரம ஷம்வத் 720இல் ஆகும்).இந்த காலத்தில் ஜினசேனாச்சார்யர் என்கின்ற மிகப்பெரிய ஜைன முனிவரின்சிஷ்யர்
என்று கூறப்படும் டெல்லியின் மன்னராக ஆட்சி செய்த அமோகவர்ஷன்என்பவரால்
உருவாக்கப்பட்டதாகும்.இந்த இருசிலைகளும் மிகவும் மூர்த்திகரமாக இன்றளவும் உள்ளது உண்மை!


ஒவ்வொரு வெள்ளி கிழமையும் தர்மதேவிக்கும் ,நேமிநாதருக்கும் சிறப்பானபூஜைகள்
இங்கு நடத்தப்படுகிறது.தமிழக ஜைனர்கள் மற்றும் சுற்று வட்டாரமக்கள்
தங்கள் நேர்த்திகடனை செலுத்த வருவது இந்த திருத்தலத்தின் மகிமையை உணர்த்தும் நேரடி சாட்சியாகும்!பழங்காலம் தொட்டே இக்கோவிலில் அருள் கொண்ட அம்மன் தருமதேவிஆலய
அர்ச்சகரின் மீது இறங்கி சாமியாடி மக்களின் குறைகளை தீர்க்கஅருள்வாக்கு
கூறிவருகிறாள்.இந்த நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது!இதற்காக கோவில் நிர்வாகம் மற்றும்அர்ச்சகரோ
எந்த கட்டணமும் வசூலிப்பது கிடையாது.தற்பொழுது இந்த ஆலயத்தில் ப்ரதிஷ்டை பணிகள் நடந்துவருகிறது.ஆன்மீகத்தில் பற்று கொண்ட அன்பர்கள்,தங்களால் இயன்ற பொருள் உதவியோ,பண உதவியோ செய்யுமாறு வேண்டுகிறேன்!பொருள் உதவி செய்பவர்கள் சிமெண்ட் மூட்டை,மற்றும் பெய்ண்டிங்,சுண்ணாம்பு பூச்சாகவோ வழங்கலாம்.பண உதவி செய்ய விரும்புபவர்கள் வரைவு வோலையாகவும்,டி.டி யாகவும்,மணியாடர் மூலமாகவும் ,"ஸ்ரீ நேமிநாதர் பகவான் டெம்பிள் டிரஸ்ட்" பெயரில் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி புண்ணியம் பெறலாம்.விலாசம்:ஜைன் கோவில்,இளங்காடு கிராமம்(&அஞ்சல்) ,வந்தவாசிதாலுக்கா
,திருவண்ணாமலை மாவட்டம் ,தமிழ்நாடு,இந்தியா.
ரூட் விபரம்:வந்தவாசியில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில்ஐந்தாவது
கிலோமீட்டரில் உள்ளது.முக்கிய குறிப்பு:மயிலாப்பூரில் சமணர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக இன்றும் சென்னை கடற்கரையை ஒட்டிய மயிலாப்பூரில் நயினார்தெரு ("நயினார்" என்பதுசமணர்களை
குறிக்கும்)என்று ஒரு தெரு இன்றும் உள்ளது.இளங்காடு ஜைன ஆலயத்தின் புகைப்படங்களை அளித்து எங்களை ஊக்கப்படுத்திய இளங்காடு தேவகுமார்(கோவில்நிர்வாகி),இளங்காடு கிருஷ்ணராஜ்(தமிழ்நாடு
அரசு
போக்குவரத்து கழகம்),இளங்காடு பன்னீர்(தமிழ்நாடு
அரசு

போக்குவரத்து கழகம்) ஆகியோருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.  நன்கொடை அளித்த பக்தர்கள் தங்களின் விவரத்தை இந்த வலைபூவிலோஅல்லது
எங்கள் மின்னஞ்சல் முகவரி, அலைபேசியில் பகிருமாறுஅன்புடன்
கேட்டுகொள்கிறேன்.அதை நாங்கள் தொகுத்து பின்னர்வெளியிடுவோம்


-இந்த
கட்டுரையை எழுதியவர்

வி
.ஜீவகன் வளத்தி.

வெளியிட்டவர்
-
ஜீ.ஹரிஹரசுதன்,
B.E third year,
வளத்தி

Wednesday 6 February 2013

கலியுக குறிப்புகளின்-II

கலியுகத்தின் குறிப்புகள்:


7.
அகோர உருவம் கொண்ட பூதங்கள் எங்கும் நடனம் புரிவதாக நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,
கலியுகத்தில் புதுமை என்கின்ற பெயரில் எங்கும் கலாச்சார சீரழிவு
ஏற்பட்டு, மக்கள் தங்களின் கலாச்சார பெருமைகளை மறந்துவிடுவார்கள்!என்று பதிலுரைத்தார்.


8.
ஒரு நீர்நிலையின் நடுப்பகுதி முற்றிலுமாக வற்றி(காய்ந்து),இயற்கையிற்கு மாறாக அதனை சுற்றி நீர் சூழ்ந்துள்ளது போல நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக ,

கலியுகத்தின் ஐந்தாம் காலத்தில், உலகத்தின் நடுவில் உள்ள மத்திய நாடுகளில்
,தர்மம் கெடும்! என்று விளக்க உரைஅளித்தார்.

9.
ஒரு சமவெளியில் நவரத்தின குவியல்கள் மலை போன்று குவிந்து இருக்கின்றது
.ஆனால் அதன் பொலிவிழந்து அழுக்குடன் காணப்படுகிறது!
நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,உண்மையான அறவொழுகத்துடன் தவம் மேற்கொள்ளும்
தவமுனிவர்களுக்கு கலியுகத்தில் ஏழுவகையான தவ வலிமைகள்
ஏற்படாமல் போகும்! என பதிலுரைத்தார்.


10.
உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து ஒரு நாய் உணவு சாப்பிட்டது.மேலும் அதற்குபூசை
பொருட்களால் பூசை செய்யப்படுகிறது! நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான்
இதற்கு பதிலாக,
மக்களிடையே நன்றி உணர்வு என்பது இருக்காது,உத்தம குணம் படைத்தவர்களை மக்கள் மதிக்க மாட்டார்கள்!அற்ப குணம் படைத்தமனிதர்கள்
சிலர் கடவுளை போல போலியாக உலவுவார்கள்!

11.
என் கனவில் ஒரு கட்டுடல் மிக்க இளம் காளை மிரண்டு ஒடுகிறது! நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,கலியுகத்தில் பல இளைஞர்கள் தனது வாழ்கையின் நெறிகளை கடைபிடிக்கமறுப்பார்கள்
!

12.
சந்திரனை சுற்றி பரிவட்டம் தோன்றியதை கண்டேன்! நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,வரப்போகும் கலியுகத்தில் தீர்தங்கரர்களுக்கு உண்டான ஞானங்களை போல்மற்ற
முனிவர்களுக்கு ஏற்படாது!
13.
சூரியன் மேகங்களால் மூடப்பட்டதை கண்டேன்! இந்த கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,
தீர்தங்கரர்கள் உருவாக மாட்டார்கள்! என ஒரே வரியில் பதிலளித்தார்.
14.
இரு அன்னப்பறவைகள் இணை பிரியாது பறந்து செல்கிறது நான் கண்டஇந்த கனவின் பலன் என்ன
? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,உண்மையான தவ முனிவர்கள் ஒருமையில் சஞ்சாரம் செய்ய இயலாது!
15.
ஒரு மரத்தோப்புகளில் உள்ள மரங்கள் அனைத்திலும் உள்ள இலைகள்உதிர்ந்து
காணப்படுகிறது!இந்த கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,
ஆண்களும்,பெண்களும் மனத்தூய்மையின்றி நல் ஒழுக்கங்களைஉதிர்த்து
வீற்றிருப்பர்!
16.
எங்கும் இலை சருகுகள் குவியலாக இருக்க கண்டேன்.இது நான் கண்ட16வது கனவு. நான் கண்ட இந்த இறுதி கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,கலியுகத்தின் இறுதி காலத்தில் தாவரங்கள் அனைத்தும் தனக்கே உரியதானமருத்துவ
பண்புகளை இழந்து காணப்படும்!இவை அனைத்தும் வரப்போகும் கலியுகத்தில் நடக்க இருக்கும்உண்மைகள்! இவையே உனக்கு கனவாக தோன்றியுள்ளது என்று  கூறி
பரதனை அவன் நாட்டிற்கு வழியனுப்பி வைத்தார். ஆதிநாதர் வரலாற்றை மேலும் அறிந்து கொள்வதற்கு முன் தமிழ்நாட்டிலுள்ள சில திகம்பர ஜைன திருத்தலங்களை பற்றிதெரிந்து
கொள்வோம்!!!!!!!!!!!!!

Saturday 2 February 2013

கலியுகத்தின் குறிப்புகள்

1.இருபத்துமூன்று சிங்கங்கள் எந்த ஒரு சண்டையும் இல்லாமல் எனது

பாரத நாடெங்கும் சுற்றி வந்ததின் பலன் என்ன? என்று

பகவானிடம் கேட்க பகவான் இதற்கு பதிலாக,


"பரதா! நீ
இருபத்து மூன்று சிங்கங்களை கனவில் கண்டதால்,

என் காலத்திற்கு பிறகு இருபத்து மூன்று தீர்த்தங்கரர்கள் தோன்றுவார்கள்.

இவர்கள் காலத்தில் பொய்காட்சியினர் அதிகம் தோன்ற மாட்டார்கள்!என்று கனவின் முதல் பலனை கூறுகிறார்".

2.ஒரு சிங்ககுட்டி தனியாக நடைபோடுகிறது இதனை தொடர்ந்து சில

மான்கள் செல்கின்றன! இதன் பலன் என்ன? என்று பரதன் கேட்க,

ஆதிநாதர் பின்வருமாறு கூறுகிறார்:

இறுதி தீர்த்தங்கரராக தோன்றப்போகும் வர்த்தமானர் மகாவீரர் காலத்தில்

பொய் காட்சியினர் அதிகமாக உருவாகிவிடுவார்கள் என்பதே இதன்

பலன்! என்று கூறினார்.

3.யானை சுமக்ககூடிய பெரும் சுமையை ஒரு குதிரை சுமக்க முடியாமல்

சுமந்து சென்றது.இதன் பலன் என்ன? என்று பரதன் கேட்க,

ஆதிநாதர் பின்வருமாறு கூறுகிறார்:

மாபெறும் மாமுனிவர்கள் தாங்கள் ஏற்றுநடத்த வேண்டிய மஹாவிரதங்களை

முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவார்கள்!முனிவர்களுக்கு

இன்னலை ஏற்படுத்தும் துர்சக்திகள் தோன்றும்! என பலன் கூறினார்.

4.ஆடுகள் தனக்கே உரியதான உணவு பழக்கங்களை மறந்து காய்ந்துபோன

சறுகுகளை உண்பதாக நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பரதன் கேட்க,


ஆதிநாதர் பின்வருமாறு கூறுகிறார்:

அறநெறிகளை கற்றுத்தந்த குருவாக இருந்தவர்கள் தன் கடைமைகளை

மறந்து தாழ்ந்த நிலையை அடைவார்கள்! என்று கூறினார்.

5.ஒரு யானையின் மீது பல குரங்குகள் அமர்ந்து செல்கின்றது!

இதன் பலன் என்ன? என்று பரதன் கேட்க,

ஆதிநாதர் பின்வருமாறு கூறுகிறார்:

நன்மை,தீமை அறியாத சுயநலம் மிக்க அரசர்கள்(ஆட்சியாளர்கள்)

தோன்றி நீதிக்கு புறம்பாக நாட்டை ஆள்வதற்கு தோன்றுவார்கள்.

என பதிலுரைத்தார்.

6.ஆந்தைகள் காகங்களால் சூழப்பட்டு துறத்தபடுகிறது இதன் பலன் என்ன? என்று பரதன் கேட்க,

ஆதிநாதர் பின்வருமாறு கூறுகிறார்:

பொய்யாக கூறப்படும் சம்பவங்களையே மக்கள் கலியுகத்தில் எற்றுகொள்வார்கள்.


இவ்வாறு
ஆதிநாதர் பரதனுக்கு கலியுகத்தின் குறிப்புகளை சூட்சமமாக
உலகத்திற்கு
உணர்த்தினார்
-தொடரும்..................