Wednesday 20 March 2013

கலியுகத்தை பற்றி ஜைனம் விவரிக்கும் காலங்கள்:

கலியுகத்தை
பற்றி ஜைனம் விவரிக்கும் காலங்கள்:
காலத்தை
ஜைனம் இரண்டு வகையாக பிரிக்கின்றது
1.
அவசர்ப்பிணி
2.
உத்சர்ப்பிணி
அவசர்ப்பிணி
காலத்தில் மனிதனின் ஆயுள் தேய்பிறைபோல இறங்குமுகமாக
இருக்கும்
.இது பத்து கோடானுக்கோடி வருடங்களை கொண்டது.
அவசர்ப்பணி
காலத்தை சமணம் ஆறு வகையாக பிரிக்கின்றது.
1.
நன்நற்காலம்:
இந்த
காலத்தின் அளவு நான்கு கோடானுகோடி கடற்காலம் என்றும்(ஒரு கடற்காலம் என்பது பத்துகோடி ஆண்டுகள்).
இந்த
காலத்தில் மனிதனின் உயரம் 6000 வில் என்றும்(ஒரு வில் என்பது 6 அடி)
ஆயுள்
மூன்று பல்லமாக இருக்கும்.
2.
நற்காலம்:
இந்த
காலத்தின் அளவு 3 கோடானுகோடி கடற்காலம்,மனிதனின் ஆயுள் 2 பல்லமாகவும்,உயரம் 4000 வில் அளவு உடையதாகவும் இருக்கும்.
3.
நற்காலம்:
இந்த
காலத்தின் அளவு 2 கோடானுகோடி கடற்காலம் என்றும் மனிதனின்
ஆயுள்
1 பல்லமாகவும் உயரம் 2000 வில் அளவுடையதாகவும் இருக்கும்.
4
தீநற்காலம்:
இந்த
காலத்தின் அளவு 1 கோடானுகோடி கடற்காலம் என்றும் மனிதனின்
ஆயுள்
42,000 ஆண்டுகள் உயரம் 500 வில் அளவு உடையதாக இருக்கும்.
5.
தீக்காலம்:
இந்த
காலத்தின் அள்வு 21,000 ஆண்டுகள்.இதில் மனிதனின் அயுள் 100 ஆண்டுகள் இருக்கும் என்றும் உயரம் 7 முழமிருக்கும் என்றும் சமணம் கூறுகிறது. இப்பொழுது கலியுகத்தில் 5ஆம் காலமாகிய தீக்காலம் நடந்துகொண்டு இருக்கின்றது.
6.
தீதீக்காலம்:
இதுவே
கலியுகத்தின் கடைசிக்காலம் ஆகும்.இந்த காலத்தின் அளவு 21,000 வருடம் நடக்கும் மனிதனின் உயரம் 1 முழம் மட்டும் இருக்கும்.மனிதனின்
ஆயுள்
வெறும் 16 வருடங்கள் மட்டுமே இருக்கும்.இந்த காலம் மிகவும் கொடுமையாக இருக்கும் என்றும் இதன் முடிவிற்கு பிறகு உலகம் எந்த விதமான உயிரனமும் தோன்றாமல் 1 லட்சம் வருடம் சூன்யமாக இருக்கும்.
இதனை
சமணம் சூன்யகாலம் என்று குறிப்பிடுகிறது. இந்த காலம் கடந்த
பின்னர்
உயிரினம் தோன்றி உதர்சர்ப்பிணி காலம் தொடங்கும்.
குறிப்பு
:ஆதிநாதர் தோன்றியது நன்நற்காலம் ஆகும்.இதுவே உத்தம போகபூமி காலம் (கற்பக விருட்சககாலம்)