Saturday 3 August 2013

தமிழகத்தில் திகம்பர சமண முனிவரின் மழைகால தங்குதல்(சாதுர்ய மாத )புண்ணிய நிகழ்ச்சி:


21.7.2013 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் பெரியகொழப்பலூர்
கிராமத்தில் உள்ள திகம்பர சமண(ஜைன)ஆலயத்தில்,
திருக்குறள் தவமணி குருவரர்
ஸ்ரீ  108 விஷ்வேஷ் சாகர் முனிமகராஜ் அவர்கள் சாதுர்மாத தங்குதல்
விழா சிறப்பாக நடைப்பெற்றது.அச்சமயம் முனிமகராஜ் அவர்கள் தன்னுடைய குரு ஸ்ரீ 108 விராக்சாகர் மகராஜ் பெயரில் நடத்தும் ஸ்ரீ விராக் அறக்கட்டளை சார்பிலும்,தமிழக ஜைன மாணவ/மாணவியர்களின் கல்வி என்னும் கடலில் கரைசேர கலங்கரை விளக்கமாக திகழும் M.K.JAIN அவர்களின் சரிதா பவுண்டேஷன் சார்பிலும் ஏராளமான தமிழக ஜைன மாணவ/மாணவியர்களுக்கு
(+12,B.E,ARTS&SCIENCE,POLYTECHNIC) கல்வி உதவி தொகை வழங்கி சிறப்பு செய்தனர்.
தமிழக திகம்பர ஜைன மாணவ மாணவியர்களுக்கு வருடம் தோறும் இதுபோன்று உதவி தொகை வழங்கி அவர்களின் வாழ்கையில் ஒளியேற்றும்
நடமாடும் திகம்பர தெய்வமாக திகழும் ஸ்ரீ 108 விஷ்வேஷ் சாகர்ஜி முனிமகராஜ்
அவர்களுக்கும்,கல்வித்தந்தை திரு.M.K.Jain அவர்களுக்கும் எங்களின் சார்பாகவும்,தமிழக சமணர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை
அவர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.


மேலும்,முனிமகாராஜுடன் இணைந்து தகுதியான திகம்பர ஜைன மாணவ\மாணவியர்களை தேர்வு செய்து ,தங்களுடைய வேலைகளை எல்லாம் ஒதுக்கி
ஜைன அறம் காக்க தன்னலம் இல்லா தொண்டாற்றி செயல்படும்
திண்டிவனம் திரு சின்னப்பா ஜைன்(RETD HEAD MASTER) அவர்களுக்கும்,
திண்டிவனம் சீத்தல் ஜீவல்லரி உரிமையாளர் சமணத்தென்றல் திரு.ஸ்ரேணிக்ராஜ் மற்றும் இவர்களுடன் இணைந்து செயல்படும் சமண சான்றோர்கள் அனைவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த புனித அறப்பணிகளை செய்து திகம்பர ஜைன மத மாணிக்கங்களாக திகழும் இவர்களது அறப்பணி தொடர வாழ்த்துகின்றோம்.

இது போன்று மற்றுமொரு நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில்
16.6.2013ல் ஏறத்தாழ சுமார் 400 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

தானத்தில் சிறந்த தானம் கல்வி தானம்!
வளர்க இவர்களின் ஜைனத்தொண்டு!